சாத்திரம் நிறைந்த ஞாலம்
இதில் யாவும் மாய்மாலம்
சூத்திரம் அறியாதாரும்
தரித்தார் ஞானிக் கோலம்
- தீயவன் -
- .08.2021
உத்தமர்கள் எங்கே?
அது நூல்களில் மட்டுமா!
புத்தர்கள் எங்கே?
அது சிலைகளில் மட்டுமே!
கபடதாரிகள் எங்கே?
அது நான் காணும் அனைவருமே!
- தீயவன் -
27.06.2021
தன்னைத் தான் பகட்டி
உயர் சிறந்தோராய் காட்டி
மாய பிம்பத்தில் வாழ்கிறாய் - மனிதா!
தவறிழைக்காதாரில்லை
முற்றும் உணர்ந்தாரும் இல்லை
ஏன் நின் குறைகளை மறுக்கிறாய்?
குறை மறைக்க வண்ணக்
கறைகளை பூசாதே!
பொய்மைக் கோட்டையும்
ஓர்நாள் இடிந்திடுமே!
- தீயவன் -
2021
தவம் புரியும் யோகியரே
உம் உடல் வருத்தி அடைந்ததென்ன!
பற்றற்று இருப்பதற்கே
பெரும் பற்றோடிருக்கிறாய்!
மனம் ஒடுக்கும் கிரியை செய்து
உன் உடலை அழிக்கிறாய்!
ஊன் வருத்தும் தவத்திற்கு
ஞானம் எட்டிப் பார்ப்பதில்லை!
வான் உயரப் பறந்தாலும்
மோட்சம் தான் கிட்டுதில்லை!
- தீயவன் -
30.05.2020
எதிர்பார்ப்புகள் இல்லாதபோது
ஏமாற்றம் வாழ்வினில் எது
ஆசைகளும் அருந்த பிறகு
தினம் பூசைகள் நெஞ்சினில் எதற்கு
செல்வங்கள் சேர்த்தென்ன லாபம்
உள்ளம் பாழினில் இன்பம் காணும் மாயம்
காலமும் கடந்து போகும்
அதில் யாவும் ஓர்நாள் அழிந்துபோகும்
- தீயவன் -
2800502020
No comments:
Post a Comment