Breaking

Thursday, June 26, 2025

ஞானப் பிதற்றல் - 1


சாத்திரம் நிறைந்த ஞாலம்

இதில் யாவும் மாய்மாலம்

சூத்திரம் அறியாதாரும்

தரித்தார் ஞானிக் கோலம்


- தீயவன் -

- .08.2021 


உத்தமர்கள் எங்கே?

அது நூல்களில் மட்டுமா!

புத்தர்கள் எங்கே?

அது சிலைகளில் மட்டுமே!

கபடதாரிகள் எங்கே?

அது நான் காணும் அனைவருமே!

- தீயவன் -

27.06.2021 


தன்னைத் தான் பகட்டி

உயர் சிறந்தோராய் காட்டி

மாய பிம்பத்தில் வாழ்கிறாய் - மனிதா!

தவறிழைக்காதாரில்லை

முற்றும் உணர்ந்தாரும் இல்லை

ஏன் நின் குறைகளை மறுக்கிறாய்?

குறை மறைக்க வண்ணக்

கறைகளை பூசாதே!

பொய்மைக் கோட்டையும்

ஓர்நாள் இடிந்திடுமே!

- தீயவன் -

2021 


தவம் புரியும் யோகியரே

உம் உடல் வருத்தி அடைந்ததென்ன!


பற்றற்று இருப்பதற்கே

பெரும் பற்றோடிருக்கிறாய்!

மனம் ஒடுக்கும் கிரியை செய்து

உன் உடலை அழிக்கிறாய்!


ஊன் வருத்தும் தவத்திற்கு

ஞானம் எட்டிப் பார்ப்பதில்லை!

வான் உயரப் பறந்தாலும்

மோட்சம் தான் கிட்டுதில்லை!

- தீயவன் -

30.05.2020 


மாய்மாலத்தாலே மைந்ததோர் கோடி
சாத்திரத்தாலே சரிந்தார் பாழி
சூத்திரம் அறிந்தால் திரையும் நீங்கி
உண்மை புலரும் மெஞ்ஞானமாகி
- தீயவன் -
05.08.2021 


எதிர்பார்ப்புகள் இல்லாதபோது

ஏமாற்றம் வாழ்வினில் எது

ஆசைகளும் அருந்த பிறகு

தினம் பூசைகள் நெஞ்சினில் எதற்கு


செல்வங்கள் சேர்த்தென்ன லாபம்

உள்ளம் பாழினில் இன்பம் காணும் மாயம்

காலமும் கடந்து போகும் 

அதில் யாவும் ஓர்நாள் அழிந்துபோகும்

- தீயவன் -

2800502020 


No comments:

Post a Comment