பிறந்தான் வளர்ந்தான் புணர்ந்தான் பெற்றான் என்று சுழலுது உலகம்
போட்டி புகழ் ஆசை வஞ்ச குரோதம் என்று இயங்குது வாழ்க்கை
- தீயவன் -
நேசிக்கப்படாமல் இருப்பது சோகமானதல்ல
ஒருவகையில் சுதந்திரமானது
- தீயவன் -
ஏழையின் ஆசை நிராசை
- தீயவன் -
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் எத்தனை அலப்பறைகள்!
- தீயவன் -
மனம் ஒரு ஆழ்கடல்
அதில் நீந்தத் தெரியாதவர்கள்
மூழ்கிவிடுகிறார்கள்
- தீயவன் -
உறவுகள் எதுவாயினும் குணங்களை பொறுத்தே அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது
- தீயவன் -
இயற்கை கருணையானதுமல்ல கருணையற்றதுமல்ல
அது இரண்டுமாகவும் இரண்டுமற்றதாகவும் உள்ளது
அதன் நியதி மனித மன புரிதலுக்கு அப்பாற்பட்டது
- தீயவன் -
புனிதர்வேடம் தரித்துலவும்
சாத்தான்களின் உலகிது!
- தீயவன் -
வெளிப்படையான கர்வத்தை/ஆணவத்தை விட
போலியான தன்னடக்கம் மோசமானது
- தீயவன் -
பழக்கமே வழக்கமாவதால்
நல்ல பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும்
- தீயவன் -
நேரத்தோடு விளையாட முடியும்
ஆனால் நேரத்திலிருந்து தப்பமுடியாது
- தீயவன் -
No comments:
Post a Comment