Breaking

Sunday, June 22, 2025

வாழ்க்கை தத்துவங்கள் - 3 | Life Quotes in Tamil

 

தியானம் உணர்த்தாத ஞானத்தையும் காயம் உணர்த்திடும்

- தீயவன் -


பிறந்தான் வளர்ந்தான் புணர்ந்தான் பெற்றான் என்று சுழலுது உலகம்

போட்டி புகழ் ஆசை வஞ்ச குரோதம் என்று இயங்குது வாழ்க்கை

- தீயவன் -


நேசிக்கப்படாமல் இருப்பது சோகமானதல்ல 

ஒருவகையில் சுதந்திரமானது

- தீயவன் -


ஏழையின் ஆசை நிராசை

- தீயவன் -


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் எத்தனை அலப்பறைகள்!

- தீயவன் -


மனம் ஒரு ஆழ்கடல் 

அதில் நீந்தத் தெரியாதவர்கள் 

மூழ்கிவிடுகிறார்கள்

- தீயவன் -


உறவுகள் எதுவாயினும் குணங்களை பொறுத்தே அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது

- தீயவன் -


இயற்கை கருணையானதுமல்ல கருணையற்றதுமல்ல

அது இரண்டுமாகவும் இரண்டுமற்றதாகவும் உள்ளது

அதன் நியதி மனித மன புரிதலுக்கு அப்பாற்பட்டது

- தீயவன் -


புனிதர்வேடம் தரித்துலவும்

சாத்தான்களின் உலகிது!

- தீயவன் -


வெளிப்படையான கர்வத்தை/ஆணவத்தை விட

போலியான தன்னடக்கம் மோசமானது

- தீயவன் -


பழக்கமே வழக்கமாவதால்

நல்ல பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும்

- தீயவன் -


நேரத்தோடு விளையாட முடியும்

ஆனால் நேரத்திலிருந்து தப்பமுடியாது

- தீயவன் -


No comments:

Post a Comment