Breaking

Monday, June 23, 2025

வாழ்கை வலிகள் - 2 | தத்துவம் மற்றும் பொன்மொழி

 

பாதையில் விழுந்த சருகாய்

கிழிந்துபோனேன் மிதிபட்டு

- தீயவன் -


மலர்கூட ஒருமுறைதான் வாடும்

மனமோ பலமுறை வாடியும் ஏனோ மரிப்பதில்லை

- தீயவன் -


கானல் என்று தெரிந்துதான் கால் நோக நடக்கிறேன்

- தீயவன் -


நித்திரையற்ற நித்திய தூக்கம் வேண்டும் 

என் துயர் ஆற்ற!

- தீயவன் -


என்னுடைய இருத்தல்

இறத்தலை விட துன்பமானது

- தீயவன் -


சடங்காகிப்போன கொண்டாட்டங்களெல்லாம்

சலிப்பை மட்டுமே தருகிறது

- தீயவன் -


உடமைகளில் பற்றில்லை

உறவுகளில் நம்பிக்கையில்லை

வாழ்க்கையில் நோக்கமில்லை

வாழ்கிறேன் ஓர் வாழ்க்கை

- தீயவன் -


இசையும் இரைச்சலாகிவிடுகிறது சில நேரங்களில்

- தீயவன் -


தனிமையை தவிர்க்க மனிதனிடம் ஓடினேன் அன்று

மனிதனிடமிருந்து தப்பிக்க தனிமையை தேடி ஓடுகிறேன் இன்று

- தீயவன் -


எனக்கு நம்பிக்கையில் நம்பிக்கையில்லாமலில்லை

சில மனிதர்களை நம்புவதில் தான் நம்பிக்கை இல்லை

- தீயவன் -


மொழிபெயர்க்க முடியா சிந்தனை சீற்றத்தில் 

சிக்கி சிதைகிறேன் தனிமையில் அமர்ந்தவாறே...

- தீயவன் -


மரணத்தின் மடியில் கண்ணுறங்க காத்திருக்கிறேன்

- தீயவன் -


உலகம் என்னவோ சுழன்றுகொண்டுதான் இருக்கிறது

என் கடிகார முட்கள்தான் இன்னும் நகரவில்லை

- தீயவன் -


வறண்ட இதயம் கண்ணீர் சிந்துவதில்லை

- தீயவன் -


நம்மேல் சொல் அம்பு எய்திட தனிமை என்ன மனிதனா!

- தீயவன் -



No comments:

Post a Comment