Breaking

Wednesday, June 25, 2025

வாழ்க்கை வலி கவிதைகள் - 1

 

காற்றிலே என் காயத்தை கரைத்தேன்

அது வான் சென்று இடி மழையாய் பொழிந்தது

- தீயவன் -


ஆளில்லா தனித்தீவில் சஞ்சரிக்க யோசிப்பேன்

ஓயா மனப்படகும் மோனநிலை அடைந்திட

- தீயவன் -


சஞ்சலத்தில் நிதம் சஞ்சரித்து

மனம் நொந்துபோவதென்ன!

வறுமையொன்றே வாழ்கையெனில்

வாழ்ந்துதான் ஆவதென்ன!

- தீயவன் -

23.05.2021


சிந்தையெல்லாம் செந்நீராய்

மனக் காயத்தில் கசிந்தோட

விந்தையான வாழ்க்கையை

எப்படி வாழ்ந்திடுவேன்!

- தீயவன் -

06.04.2021


சிறகொடிந்த பறவையொன்று

வெளிச்சம் தேடி பறக்கிறது!

போகுந்திசை தெரியாமல்

அங்குமிங்கும் அலைகிறது!

- தீயவன் -

28.12.2020


மனதை துண்டாக்கும் நினைவுகளே

இனியும் உடைப்பதற்கு எதுவும் இல்லை

பல நூறு சில்லியாய் உடைந்து உடைந்தே

ஜீவனற்ற ஜடமாய் இருக்கேன்

- தீயவன் -




No comments:

Post a Comment