காற்றிலே என் காயத்தை கரைத்தேன்
அது வான் சென்று இடி மழையாய் பொழிந்தது
- தீயவன் -
ஆளில்லா தனித்தீவில் சஞ்சரிக்க யோசிப்பேன்
ஓயா மனப்படகும் மோனநிலை அடைந்திட
- தீயவன் -
மனம் நொந்துபோவதென்ன!
வறுமையொன்றே வாழ்கையெனில்
வாழ்ந்துதான் ஆவதென்ன!
- தீயவன் -
23.05.2021
சிந்தையெல்லாம் செந்நீராய்
மனக் காயத்தில் கசிந்தோட
விந்தையான வாழ்க்கையை
எப்படி வாழ்ந்திடுவேன்!
- தீயவன் -
06.04.2021
சிறகொடிந்த பறவையொன்று
வெளிச்சம் தேடி பறக்கிறது!
போகுந்திசை தெரியாமல்
அங்குமிங்கும் அலைகிறது!
- தீயவன் -
28.12.2020
மனதை துண்டாக்கும் நினைவுகளே
இனியும் உடைப்பதற்கு எதுவும் இல்லை
பல நூறு சில்லியாய் உடைந்து உடைந்தே
ஜீவனற்ற ஜடமாய் இருக்கேன்
- தீயவன் -
No comments:
Post a Comment