*முன்குறிப்பு: இவைகள் வெறும் அனுமானங்களே
வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புத்தரும் இயேசுவும் இணைய காரணமாக இருந்தது பலியிடுதல் தான். இவற்றைப்பற்றி பார்பதற்குமுன் சிலவற்றை கூறிக்கொள்கிறேன். அதாவது பிராமணர்கள் தான் யூதர்கள் என்ற நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்படவில்லை. மற்றும் பலியிடுதலின் தோற்றம் பற்றியும் பார்க்கப்போவதில்லை. உலகம் முழுவதும் பலதரப்பட்ட மக்களால் பலவிதமாக பலியிடும் பழக்கம் இருந்துவருகிறது. பெருமளவு தமிழர்களாலும் பலியிடும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே அவற்றை பிறகு பார்ப்போம்.

![]() |
Credit: Unknown |
இந்த பலிபீடத்தில் விலங்கு (ஆடு,மாடு,புரா.,) கொன்று அதன் ரத்தத்தை ஆலயத்திலோ, தங்கள் மெலோ, வீடுகளிலோ தெளிப்பதால் பரிசுத்தமடைகிறது என்று கருதுகிறார்கள். பின் அந்த விலங்கை பலிபீடத்தில் தீயிட்டு எரித்து இறைவனுக்கு படைக்கிறார்கள் .கிட்டத்தட்ட பிராமணர்களின் நம்பிக்கையும் இவ்வாறே இருப்பது ஆச்சரியம். இவற்றைப்பற்றி நெருப்புவழிபாடு எனும் முந்தைய கட்டுரைகளில் ஓரளவிற்கு புரிந்துகொள்ளும் படியாக பார்த்தோம்.



தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களின் வழிபாடுகளில் சில மாற்றத்தை செய்தார். பலியிடப்பட்ட விலங்கின் ரத்தம் பாவங்கள் நீங்கி பரிசுத்தம் தருவதாக நம்பிக்கொண்டு பலியிடுதலை இறை வழிபாடாக கொண்ட யூதத்தின் நம்பிக்கையை நூதனமாக மாற்றியமைத்தார். அதுதான் திருவிருந்து எனும் "திருப்பலி". அப்பமும் திராட்சை ரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் இருந்து பரிசுத்தப்படுத்தும் என்றும் இவற்றை மட்டும் என் நினைவாக பின்பற்றுங்கள் என்று சீடர்களிடம் கூறினார்.
![]() |
Artist - Unknown |
இப்படியாக ஒரேவிதமான நம்பிக்கைகளை கொண்டிருந்த யூதமும் பிரமாணமும் புத்தராலும் இயேசுவாலும் மாற்றம் காண தொடங்கியது. இயேசுவை பின்பற்றியவர்கள் மட்டும் பலியிடுதலை விடுத்து திருப்பலியை கடைப்பிடித்தார்கள் (அதற்காக கிறிஸ்தவம் சிறப்பானது என்று நான் கூறவில்லை). யூதமதத்திலிருந்து உருவான கிறிஸ்துவத்தில் பலியிடுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவனாக நம்புவதால்தான் அவர்சொன்ன கொல்லாமையை கடைபிடிக்கிறார்கள். இல்லையென்றால் இறைவன் பெயரில் மனிதர்களை கூட பலியிட தயங்கமாட்டார்கள் (அதையும் ஆபிரகாம் செய்யத்துணிந்தார் என்று அவர்களின் Bible-களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் காண்க) அவர்கள் இன்னும் ஆட்டுமந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். இறைவன் சொன்னதாக சொன்னால் தான் கேட்பார்கள் என்பதை இதன்மூலம் உணரலாம்.
மற்றும் இந்தியாவில் பிராமணர்கள் புத்தரை ஏற்றுக்கொண்டு கொல்லாமையை கடைபிடிக்கவில்லை மாறாக தன் அதிகார நலனுக்காக அதையொரு ஆயுதமாக மட்டுமே கடைபிடித்துவருகிறார்கள்.
மற்றும் இந்தியாவில் பிராமணர்கள் புத்தரை ஏற்றுக்கொண்டு கொல்லாமையை கடைபிடிக்கவில்லை மாறாக தன் அதிகார நலனுக்காக அதையொரு ஆயுதமாக மட்டுமே கடைபிடித்துவருகிறார்கள்.
©️தீயவன் டேவிட்
No comments:
Post a Comment